articles

img

மேற்கு வங்கம், பஞ்சாபில் ஆளும் கட்சிகள் தனித்து போட்டியிடுவது இந்தியா கூட்டணியைப் பாதிக்காது

மேற்கு வங்கத்திலும், பஞ்சாப் மாநிலத்திலும் ஆளும் மாநில முதல்வர்கள் தனித்துப் போட்டியிடப் போவதாகக் கூறியிருப்பது, ராமர் கோவில் கும்பாபிஷேகம், இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீடு முதலானவை குறித்து, தி இந்து நாளிதழ் செய்தியாளர் ஷோபனா கே. நாயரின் கேள்விகளுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பதில் அளித்துள்ளார். 

n    கேள்வி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இருவரும் தங்கள் மாநிலங்களில் தாங்கள் இந்தியா கூட்டணியில் இடம் பெறாமல் தனித்தே போட்டி யிடப்போவதாகக் கூறியிருக்கிறார்கள். இது இந்தியா கூட்டணி மீதான அடி என்று பலர் கருதுகிறார்கள். தங்கள் கருத்து என்ன?

    சீத்தாராம் யெச்சூரி: ஒவ்வொரு கட்சியும் அவர் களின் சொந்த நிலைப்பாட்டை எடுத்து அறி விப்பார்கள். அது குறித்தெல்லாம் நான் கருத்து கூறுவதற்கில்லை. எனினும் இவ்விரு மாநிலங் களிலும் இது எதிர்பார்த்த ஒன்றுதான். இது எந்த விதத்திலும் இந்தியா கூட்டணியை பாதிக்காது. நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவும், நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயக குணாம் சத்தைப் பாதுகாப்பதற்காகவும் நாங்கள் என்றென் றும் பணியாற்றிடுவோம் என்பதே எப்போதும் எங்கள் நிலைப்பாடாகும். சென்ற சட்டமன்றத் தேர்தல்களின்போது, பாஜக-வைத் தோற்கடிப்ப தற்காகவும், திரிணாமுல் காங்கிரசைத் தோற் கடிப்பதற்காகவும் காங்கிரஸ் மற்றும் இதர மதச் சார்பற்ற கட்சிகளுடன் சேர்ந்து செயல்பட்டோம்.

அணி அணியாகத் திரளும்  வங்க இளைஞர்கள்
திரிணாமுல் காங்கிரஸ் மிகவும் மூர்க்கத்தனமான கட்சியாகவே இருந்து வந்திருக்கிறது. மம்தா பானர்ஜி எங்களை ஒரு பயங்கரவாத அமைப்பு என்று கூட அழைத்திருக்கிறார். இன்னமும் என்ன வெல்லாமோ சொல்லியிருக்கிறார். அதற்குள் எல்லாம் இப்போது நான் செல்ல விரும்பவில்லை. அவர்கள் என்னவேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகட்டும். எங்கள் நிலைப்பாடு இதுதான். வங்கத்தில் இளை ஞர்கள் இப்போது எங்கள் பக்கம் அணி அணியாக வந்து கொண்டிருக்கிறார்கள். ஜனவரி 8ஆம் தேதி கொல்கத்தா, பிரிகேடியர் மைதானத்தில் நடைபெற்ற பேரணி/பொதுக்கூட்டம் இதைத்தான் காட்டியது. இது எங்கள் எதிர்பார்ப்பையெல்லாம் காட்டிலும் மிகவும் அதிகமாகும்.

பஞ்சாப்பைப் பொறுத்தவரை, அங்கே ஆள்வோ ருக்கு எதிராக அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந் தால் அது பாஜக மற்றும் அகாலிதளம் உட்பட எதிர்க் கட்சிகளுக்கே சாதகமாக அமைந்திடும். சில மாநிலங் களில் தொகுதிப் பங்கீடுகள் நடைபெறும், சிலவற்றில் நடைபெறாமல் போகக்கூடும். இவை அனைத்தும் அந்தந்த மாநிலங்களின் பிரத்யேகத் தன்மைகளைப் பொறுத்தவையாகும். உதாரணமாக, கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே நேரடியாகவே போட்டி. எனவே இங்கே பாஜக ஓர் இடத்தைக்கூட பெற முடியவில்லை.

இம்மாத இறுதிக்குள் தெளிவான முன்னேற்றம்

n கேள்வி: எதிர்க்கட்சிகள் சென்ற ஆண்டு ஜூன் 23 அன்றுதான் ஒன்றுபட்டன. கடந்த ஏழு மாதங்களில் தொகுதிப் பங்கீடு என்பது எங்கும் நடைபெறவில்லை. இவ்வாறு மிகவும் தாமத மாகிவிட்டது, இல்லையா?
     சீத்தாராம் யெச்சூரி: பேச்சுவார்த்தைகள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. தொகுதிப் பங்கீடு கள் மாநில அளவில் இறுதிப்படுத்தப்படும். மகாராஷ் டிராவில், மகா விகாஸ் அகாதி இருக்கிறது. பீகா ரில், மகாகத் பந்தன் இருக்கிறது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி இருக் கிறது. இவ்வாறு ஒவ்வொரு மாநிலத்திலும் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அநேகமாக இந்த மாத இறுதிக்குள் மேலும் தெளி வான விதத்தில் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும் என நம்புகிறேன்.

n கேள்வி:  இந்தியா கூட்டணி சார்பில் அதன் கட்சிகள் அனைத்தும் இணைந்து பேரணியோ, பொதுக்கூட்டமோ இதுவரை நடைபெற வில்லை. இது மிகவும் தாமதம், இல்லையா?   

   சீத்தாராம் யெச்சூரி: இந்தியா கூட்டணியின் முதல் கூட்டத்திலிருந்தே, கூட்டங்கள் தொடர்ச்சியாக நடத்திட வேண்டும் என்றும், மாநில அளவில் தொகு திப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கிட வேண்டும் என்றும், கூறி வந்திருக்கிறோம். இவை  நடைபெறவில்லை. எனினும் பிப்ரவரி இறுதிக்குள் இதற்கான செயல்முறைகள்  தொடங்கிவிடும் என்றே நான் நினைக்கிறேன்.

nகேள்வி: ராமர் கோவில் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் ஒரு பரவச நிலை ஏற்பட்டிருப்பது, எதிர்க்கட்சிகளுக்கு தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒரு பாதகமான நிலையை ஏற்படுத்தும் என நீங்கள் நம்புகிறீர்களா?    

 சீத்தாராம் யெச்சூரி: இது எதிர்பார்க்கப்பட்டதே. இவ்வாறு ராமர் கோவில் திறக்கப்பட்டதை, தேர்தல்  ஆதாயத்திற்குப் பெரிய அளவில் பயன்படுத்திக் கொள்ள விரும்புவார்கள். இது எங்கள் கருத்து மட்டுமல்ல. நாட்டில் உள்ள சங்கராச்சாரியார்களும் ஏன் இவ்வாறு அவசர கதியில் பாதியளவே கட்டப் பட்ட கோவிலைத் திறந்தீர்கள் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

வாழ்வாதாரப் பிரச்சனைகளே முக்கியம்

nகேள்வி: இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்?  

    சீத்தாராம் யெச்சூரி: இதுவே அவர்களுடைய இந்துத்துவா ஒருங்கிணைப்பாகும். இதனை நாம்  சட்டமன்றத் தேர்தல்களின்போதும் பார்த்தோம். இதனை எப்படி எதிர்கொள்வது என்பதில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் மிகவும் தெளிவாக இருக் கின்றன. இது தொடர்பாகக் கட்சிகளுக்கிடையே ஒரு பொதுவான புரிதல் இருக்கிறது.

மதச்சார்பின்மைக் கொள்கையை உறுதியாகப் பின்பற்ற வேண்டும் என்பதிலும், மதத்தை அரசு மற்றும் அரசாங்கத்தின் செயல்பாடுகளுடன் கலக்கக் கூடாது என்பதிலும், உறுதியாக இருக்கின்றன. இத்துடன் மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் வாழ்வாதாரப் பிரச்சனைகளும் மிகவும் முக்கியமாகும்.

ராமர் கோவில் மக்களிடையே மதரீதியாக கிளர்ச்சி நிலையை ஏற்படுத்தி இருக்கலாம். எனினும், ஒவ்வொருவருக்கும், தாங்கள் விரும்பும்  மதத்தையும், கடவுளையும் தெரிவுசெய்துகொள்வதற்கு உரிமை உண்டு. ஆனால் நம் முன் உள்ள கேள்வி என்ன வெனில், இப்போது அவர்களின் வாழ்நிலைமை என்ன என்பதேயாகும். கடந்த அரை நூற்றாண்டில், வேலையில்லா திண்டாட்டம் உச்சத்திற்கு சென்றிருக்கிறது. விலை வாசி கட்டுக்கடங்காமல் உயர்ந்துகொண்டிருக்கிறது.

வாழ வழியின்றி மக்கள் புலம்பெயர்ந்து சென்று  கொண்டிருக்கிறார்கள். பின்னர் வேலை எதுவும் கிடைக்காது மீண்டும் கிராமங்களுக்கே திரும்பச் சென்றுகொண்டிருக்கிறார்கள். இது ஓர் அபாயகர மான அறிகுறியாகும். இவ்வாறு எதார்த்த நிலை இருக்கக்கூடிய சமயத்தில், கிராமப்புற மக்களின் உயிர்நாடியாக இருந்திடும் மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தையும் ஆட்சி யாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெட்டிச் சுருக்கிக் கொண்டிருக்கிறார்கள்.       

இந்துத்துவா ஒருங்கிணைப்புக்கும் அதற்கு எதிரானவர்களுக்கும் போட்டி

n    கேள்வி: நீங்கள் சொல்வது சரி என்றால், பின் எப்படி பாஜக மூன்று மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றது?  

 சீத்தாராம் யெச்சூரி: தேர்தல் நடைபெற்ற ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தாங்கள் பெற்று வந்த வாக்குகளைத் தக்க வைத்துக் கொண்டிருக் கிறது. பாஜக பெற்ற கூடுதல் வாக்குகள் என்பது, இந்துத்துவா ஒருங்கிணைப்பு மூலமானதாகும். அதேசமயத்தில் பாஜக, கர்நாடகா, இமாசலப் பிர தேசம் மற்றும் தெலங்கானாவில் தோல்வி அடைந் திருக்கிறது. ஆகையால், இப்போதுள்ள நிலைப்படி,  நாட்டிலுள்ள வாக்காளர்கள் ஒரு வழியாக சென் றிடவில்லை. இந்துத்துவா ஒருங்கிணைப்புக்கும், அதற்கு எதிராக இருப்பவர்களுக்கும் இடையே ஒரு போட்டி இருக்கிறது என்பதே உண்மை.

நன்றி: தி இந்து நாளிதழ், 26.1.2024
- தமிழில்: ச.வீரமணி